அரசு உணவு கிடங்கிலிருந்து கேரளாவுக்கு கடத்தவிருந்த 55 டன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டேஸ்வர் பகுதியில் அரசு சார்பில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் அரசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொண்ட உணவு கிடங்கு ஒன்று உள்ளது. இங்கிருந்து தான் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். அந்த வகையில் ஏழை எளிய மக்களுக்காக அரசு வழங்கியுள்ள 55 டன் அரிசியை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் விற்கப்படுவதாக மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மள்ஞ்சாப்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து உணவு கிடங்கிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஏராளமான அரசி மூட்டைகள் லாரியில் வைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அங்கிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் உணவு கிடங்கில் மக்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த 55 டன் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து புதுப்பித்து லாரியில் கேரளாவுக்கு கடத்தி சென்று விற்க இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவர்களிடமிருந்து 55 டன் அரிசி, ஒரு லாரி, 2 கார்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 5 பேரான இஸ்மாயில் பாரி, முஸ்தபா தவுபிக், உபேதுல்லா, முகமது மேல்ரா, நியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான விசாரணை நடந்து வருகிறது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…