ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 56 வயதான சுகாதார பணியாளர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்ட ஆறு நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குருகிரமை சேர்ந்தவர், 56 வயதான லாஜ்வந்தி. இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி இவரும் கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு நாட்களுக்கு பின், லாஜ்வந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவனைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த லாஜ்வந்தியின் கணவர், கொரோனா தடுப்பூசி போட்டதால் தன் மனைவி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அவரின் மரணத்திற்கு மரணத்துக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே மரணம் குறித்த காரணம் தெரியவரும் எனவும், தடுப்பூசி போட்டதால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…