மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காலை நிரவப்படி 7.57 சதவிகித வாக்குகள் பதிவு.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.
இதற்கு ஏதுவாக பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்காக வேட்புமனு தாக்கலும் செய்தார்.
இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தொகுதி முழுவதும் 97 வாக்குப்பதிவு மையங்களில் 287 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை, பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.
பவானிபூர் தொகுதியில் கடந்த 2011-16ல் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். பவானிபூர் தவிர, ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றால் தான் மேற்கு வங்க முதல்வராக மம்தா தொடரும் முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மம்தா இந்த இடைத்தேர்தலில் பெற்றி எம்எல்ஏவாக தேர்வாகி, முதல்வர் பதவியை தக்க வைப்பாரா என்று அக்டோபர் 3-ம் தேதி தெரியவரும்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…