மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை தண்டனை; 5 லட்சம் அபராதம் – மத்திய அரசு!

Published by
Rebekal

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்குபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் பரவி வந்தாலும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள் போன்றோர்கள் மிகவும் மதிக்கத்தக்கவர்களாகவே கருதப்பட வேண்டும். ஆனால், கொரோனாவால் தங்கள் உறவினர்கள் உயிரிழந்து விடும் பட்சத்தில் பலர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதனையடுத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள் நேற்று  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தாக்குதல் போன்றவை அவர்களது மன உறுதியைக் குலைத்து, பாதுகாப்பின்மையை உருவாக்கும் எனவும், இனி மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுபவர்கள் மீது 2020ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 2020 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். ஆனால் கொடும் காயங்கள் ஏற்பட்டிருந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கலாம் என இந்த சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

3 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

3 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

5 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

5 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

7 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

8 hours ago