அரை கிலோ மீட்டருக்கு 8 அடி உயர சுவர்.! ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அழகுபடுத்தும் பிரதமர் மோடி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். இவரை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது ட்ரம்ப்  மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களை சுற்றிப்பார்க்கின்றனர். மேலும் வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே, அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது. அந்தவழியில் உள்ள குடிசை பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு தற்போது சமூகவலை தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதில் இதுபோல் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் மட்டும் சுவர்கள் எழுப்பப்பட்டு, இந்தியாவின் வறுமையை ஒழித்துவிடுகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி ஆணையம், குடிசை பகுதிகளை மறைக்க வேண்டிய எண்ணத்தில் சுவர் எழுப்பப்படவில்லை என்றும், ஏற்கனவே பழுதான சுவருக்கு பதிலாக புதிய சுவர் கட்டப்படுகிறது. மேலும் சுவரின் உயரம் 4 அடிக்கு மேல் இருக்காது, இதனால் குடிசைப்பகுதி மறைந்துவிடாது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

5 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

9 hours ago