ஜிஸ்டி இழப்பீட்டிற்காக தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு எட்டாவது வாரத் தவணையாக ரூ 6,000 கோடியை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதில் ரூ. 5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், டெல்லி , ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை செயல்பாடுகளின் மூலமான வருவாயில் இடைவெளி இல்லை.
4.1902 சதவீத வட்டிக்கு இந்த வாரத்திற்கான கடன் தொகையை மத்திய அரசு பெற்றுள்ளது. இதுவரை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் ரூ 48,000 கோடி, 4.6986% வட்டியில் பெறப்பட்டுள்ளது.ஏற்கனவே ரூ.1,06,830 கோடியை, மாநிலங்கள் கூடுதலாக பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள கடன் தொகையின்படி தமிழகத்திற்கு ரூ.3191.24 கோடி, சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ. 9,627 கோடியை (0.50%) கூடுதலாக மாநிலம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…