Categories: இந்தியா

காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட 6 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் பாஜகவில் ஐக்கியம்!

Published by
பாலா கலியமூர்த்தி

BJP: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சுயேட்சை உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.

இதனால், காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி தோல்வி அடைந்தார். இந்த செயலால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை அந்த 6 எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. அதேசமயம், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 3 சுயட்சைகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அந்த மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

எனவே, 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் 35 எம்எல்ஏகளின் ஆதரவு தேவை. ஆனால், தற்போது 6 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 34 குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது. மறுபக்கம்ம் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் இமாச்சல அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த சூழலில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 3 சுயேட்சை உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களுடன் பதவியை ராஜினாமா செய்த 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 பேர் டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சல் பாஜக தலைவர் ராஜீவ் பிண்டல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

10 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

14 hours ago