Categories: இந்தியா

காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட 6 முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 9 பேர் பாஜகவில் ஐக்கியம்!

Published by
பாலா கலியமூர்த்தி

BJP: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சுயேட்சை உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.

இதனால், காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி தோல்வி அடைந்தார். இந்த செயலால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை அந்த 6 எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. அதேசமயம், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 3 சுயட்சைகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அந்த மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

எனவே, 68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் 35 எம்எல்ஏகளின் ஆதரவு தேவை. ஆனால், தற்போது 6 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 34 குறைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது. மறுபக்கம்ம் பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் இமாச்சல அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த சூழலில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 3 சுயேட்சை உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களுடன் பதவியை ராஜினாமா செய்த 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 பேர் டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சல் பாஜக தலைவர் ராஜீவ் பிண்டல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார்கள்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

17 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

27 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

57 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago