மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 90 % பேர் மில்லியனர்கள்….42% பேர் மீது கிரிமினல் வழக்கு…!

Published by
Edison

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். இதன்மூலம், பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 78 ஆக உள்ளது.

இந்நிலையில்,நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் உள்ள 78 அமைச்சர்களில், குறைந்தது 42% பேர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற  கிரிமினல் வழக்கு உள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) கருத்துக் கணிப்பு உரிமைக் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏ.டி.ஆர் என்பது ஒரு தேர்தல் உரிமைக் குழுவாகும், இது தேர்தல்களுக்கு முன்னதாக அடிக்கடி அறிக்கைகளை வெளியிடுகிறது.இதன்மூலமாக, அரசியல்வாதிகளின் குற்றவியல், நிதி மற்றும் பிற பின்னணி விவரங்களை அறிய முடியும்.

மேலும், புதிய மத்திய அமைச்சரவையில் 70 (90 சதவீதம்) அமைச்சர்கள் மில்லியனர்கள், அதாவது அவர்கள் மொத்த சொத்து மதிப்பு 10 மில்லியனுக்கும் (ஒரு கோடி) அதிகமாக உள்ளதாக ஏடிஆர் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.அதன்படி,

  • ஜோதிராதித்யா சிந்தியா – ரூ.379 கோடிக்கு மேல்
  • பியூஷ் கோயல் – 95 கோடிக்கு மேல்
  • நாராயண் ரானே- ரூ.87 கோடிக்கு மேல்
  • ராஜீவ் சந்திரசேகர் – ரூ.64 கோடிக்கு மேல்

ஆகிய நான்கு அமைச்சர்கள் ‘உயர் சொத்து அமைச்சர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.அதாவது அவர்கள் 50 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும்,மிகக்குறைந்த சொத்துக்களை உள்ளதாக அறிவித்த அமைச்சர்கள்

  • திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பூமிக் – 6 லட்சத்துக்கு மேல்
  • மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜான் பார்லா – 14 லட்சத்துக்கு மேல்,
  • ராஜஸ்தானைச் சேர்ந்த கைலாஷ் சவுத்ரி – 24 லட்சத்துக்கு மேல்,
  • ஒடிசாவைச் சேர்ந்த பிஷ்வேஸ்வர் துடு – 27 லட்சத்திற்கு மேல்,
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த வி முரளீதரன் – 27 லட்சத்துக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Published by
Edison

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

45 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

58 minutes ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago