தெலுங்கானாவில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கோஷம்பேட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக வேலை செய்து வருபவர் வி .லாவண்யா இவருடன் கிராம வருவாய் அதிகாரியாக இருப்பவர் அந்தையா .இவர் சமீபத்தில் விவசாயி ஒருவரிடம் மூலப்பத்திரிகை மாற்றியமைக்க ரூ. 8 லட்சம் கேட்டு உள்ளார்.
அந்த பணத்தில் தாசில்தார் வி .லாவண்யாவிற்கு ரூ. 5 லட்சமும் அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.இது குறித்து அந்த விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த விவசாயி கிராம வருவாய் அதிகாரியாக இருக்கும் அந்தையாவிடம் ரூ .4 லட்சம் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அந்தையாவிடம் விசாரணை செய்யும் போது வி .லாவண்யாவிற்கும் தொடர்பு உள்ளது என கூறினார்.மேலும் தாசில்தார் அலுவலகம் மற்றும் வி .லாவண்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.சோதனையில் கணக்கில் வராத ரூ .93.5 லட்சம் மற்றும் 400 கிராம் தங்க நகைகள் மற்றும் சில பாத்திரங்கள் பறிமுதல் செய்தனர்.
தாசில்தார் வி .லாவண்யாவிடம் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தாசில்தார் வி .லாவண்யா 2017-ல் சிறந்த தாசில்தார் விருது பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…