கேரளாவில் கொரோனாவிலிருந்து பூரண நலம் பெற்ற 110 வயதான மூதாட்டி.!

Published by
Ragi

கேரளாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 110 வயதான மூதாட்டி பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 110 வயதான ரந்தாதினி வரியாத் பத்து என்ற மூதாட்டி கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். மகள் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட இந்த மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு நேற்றைய தினம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் கே. கே சைலஜா கூறுகையில், கொரோனாவுக்கான லேசான அறிகுறிகளுடன் தான் பத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரது வயதினை கணக்கில் கொண்டு மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அதற்கு மூதாட்டி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 110 வயதான மூதாட்டி மீண்டது பெருமை என்று தெரிவித்துள்ளார். மேலும் மூதாட்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் 14 நாட்கள் வீட்டில் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 105 வயதான மூதாட்டி மற்றும் 103 வயதான முதியவர் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!

400 கிலோ யுரேனியத்தை பதுக்கிய ஈரான்? அமெரிக்கா தாக்குதல் என்னதான் ஆச்சு.? டிரம்புக்கு ஷாக்.!

அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ்,  ஈரானின் மூன்று…

39 minutes ago

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…

2 hours ago

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

2 hours ago

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

3 hours ago

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

5 hours ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

5 hours ago