டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள 1000 கிமீ சைக்கிளில் வந்த 60 வயது முதியவர்!

Published by
Rebekal

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள பீஹாரிலிருந்து 1000 கிமீ சைக்கிளில் தேசியக்கொடியுடன் வந்தடைந்த 60 வயது முதியவர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியிலிருந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களின் விவாசிகள் இணைந்து டெல்லியிலுள்ள திக்ரி எனும் இடத்தில போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதிஅரவாக தமிழகத்திலும் பல அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வெவ்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தினமும் வந்துகொண்டு தான் உள்ளனர்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய சத்யதேவ் மன்ஜி எனும் 60 வயது முதியவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பீகாரிலிருந்து 1000 கிமீ சைக்கிளிலேயே பயணம் செய்து தற்பொழுது டெல்லியை அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தான் கடந்த 11 நாட்கள் சைக்கிளிலேயே பயணம் செய்து வந்துள்ளதாகவும், போராட்டம் முடியும் வரை தான் இங்கே தான் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

46 minutes ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

53 minutes ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

2 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago