Categories: இந்தியா

தக்காளியை கண்காணிக்கும் கேமரா! திருட்டை தடுக்க விவசாயின் யோசனை!

Published by
கெளதம்

நாடு முழுவதும் தக்காளி விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இதனால், தக்காளிகள் திருடு போவதும், தக்காளி பாதுகாப்புக்கு பணியாளர்களை நியமித்த செய்திகள் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில், தற்போது ஒரு விவசாயி தக்காளியை கண்காணிக்க தனது பண்ணையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

காய்கறி சந்தையில் தக்காளி கிலோ 100-200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தின் ஷாபூர் பஞ்சார் என்ற இடத்தில் உள்ள ராவத் என்ற விவசாயி ஒருவர், தக்காளிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

Cctv Camera In Tomato Farm [file image]

சில நாட்களுக்கு முன்பு, ராவத் பண்ணையில் இருந்து 25-30 கிலோ தக்காளி திருடப்பட்டது. அதன் பிறகு, ராவத் தனது பண்ணையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இனி தக்காளி நஷ்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார் ராவத், அந்த தக்காளியை விற்றால், அவருக்கு ஆறு முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை கிடைக்குமாம்.

Cctv Camera In Tomato Farm [file image]

இந்நிலையில், அந்த விவசாயி தனது பயிர் பாதுகாப்புக்காக ரூ.22,000 மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். மேலும், இந்த சிசிடிவி கேமரா சூரிய சக்தியில் இயங்குவதால் மின் கட்டணம் ஏதும் ஏற்படாது என்று அந்த விவசாயி கூறுகிறார்.

Published by
கெளதம்

Recent Posts

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

4 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

5 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

5 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

5 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

6 hours ago

CSK vs RR : அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் – வைபவ்..! சென்னை மீண்டும் தோல்வி.!

டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…

13 hours ago