Cctv Camera Tomato file image]
நாடு முழுவதும் தக்காளி விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இதனால், தக்காளிகள் திருடு போவதும், தக்காளி பாதுகாப்புக்கு பணியாளர்களை நியமித்த செய்திகள் கவனத்தை ஈர்த்தது. அந்த வகையில், தற்போது ஒரு விவசாயி தக்காளியை கண்காணிக்க தனது பண்ணையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.
காய்கறி சந்தையில் தக்காளி கிலோ 100-200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தின் ஷாபூர் பஞ்சார் என்ற இடத்தில் உள்ள ராவத் என்ற விவசாயி ஒருவர், தக்காளிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, ராவத் பண்ணையில் இருந்து 25-30 கிலோ தக்காளி திருடப்பட்டது. அதன் பிறகு, ராவத் தனது பண்ணையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இனி தக்காளி நஷ்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார் ராவத், அந்த தக்காளியை விற்றால், அவருக்கு ஆறு முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை கிடைக்குமாம்.
இந்நிலையில், அந்த விவசாயி தனது பயிர் பாதுகாப்புக்காக ரூ.22,000 மதிப்பிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். மேலும், இந்த சிசிடிவி கேமரா சூரிய சக்தியில் இயங்குவதால் மின் கட்டணம் ஏதும் ஏற்படாது என்று அந்த விவசாயி கூறுகிறார்.
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…