Puducherry Governor Tamilisai Soundararajan [file image]
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி அரசு சார்பில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து என ஆளுநர் அறிவிப்பு.
ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்றே தெரியாமல் ஒரே இரவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 900 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த ரயில் விபத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மறுபக்கம், மத்திய பாஜக மற்றும் மாநில அரசிகள் இன்று ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தை அடுத்து புதுச்சேரியில் தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தார் தமிழிசை சவுந்தரராஜன். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், இரயில்வே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரி அரசு சார்பில் மாஹேவில் நான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு இரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
விபத்து நடந்த உடனே இரயில்வே துறையுடன் இணைந்து மீட்பு பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்கள், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்ததானம் போன்ற பல்வேறு உதவிகள் செய்து வரும் ஒடிசா மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்.. வணக்கங்களும்.. தழைக்கட்டும் மனிதநேயம் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…