Categories: இந்தியா

இன்று டெல்லியில் அவசரமாக கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுழலில், இன்று டெல்லியில் அவசரமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடுகிறது. இதனால் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டங்களில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டது. இதன்பின், காவிரி ஒழுங்காற்று குழு அதிகாரிகள் தமிழகத்திற்கு காவிரியில் அடுத்த 18 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், போதுமான நீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தது.

ஏற்கனவே, இதுபோன்று தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அப்போது, கர்நாடக அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்தனர். இதனால், இரு மாநிலங்களும் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், தமிழக அரசு தொடர்ந்து, எங்களுக்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்று சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில்  காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று கர்நாடக அரசும் தங்களது நிலை குறித்து தண்ணீர் திறப்பு குறித்தும் வாதங்களை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இன்றைய கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறும். கூட்டத்துக்கு பிறகு தண்ணீர் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

24 minutes ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

48 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

2 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

3 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

3 hours ago