Categories: இந்தியா

நீதிமன்ற தீர்ப்பு.! IPC-21இன் படி திருமணம்.! வைரலாகும் வழக்கறிஞரின் வித்தியாசமான அழைப்பிதழ்.!

Published by
மணிகண்டன்

அசாமை சேர்ந்த வழக்கறிஞர் தனது திருமண பத்திரிகையை நீதிமன்ற தீர்ப்பு போல அச்சிட்டு உள்ளார். அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில், இணையத்தில் வைரலாக பலரும் பலவிதமாக சிந்தித்து செயல்படுத்தி வருகின்றனர். அவர்கள் சிந்தித்ததில் எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்திருந்தால் உலக பணக்காரர்களின் வரிசையிலே உக்காந்திருப்பார்கள் போலும் அந்தளவுக்கு பிரபலமாக சிந்திக்கிறார்கள்.

அப்படிதான், அசாம் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞர் வித்தியாசமாக பல நாட்கள் யோசித்து அவரது திருமண பத்திரிகையை வடிவமைத்துள்ளார்.

அசாம், கௌஹாத்தியில் நடைபெறவுள்ள திருமணத்திற்க்காக ஒரு பத்திரிகையை வடிவமைத்துள்ளார். அதாவது, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு முடிந்தால், அதன் தீர்ப்பை எப்படி எழுத்துவார்களோ அதே போல, அந்த பத்திரிகையை வடிவமைத்துள்ளார்.

நீதிமன்ற தராசின் இருபக்கமும், அஜய் ஷர்மா, பூஜா ஷர்மா என தம்பதியினர் பெயரும், அதற்கு கீழே, ‘இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் திருமணம் செய்வதற்கான உரிமை என்பது வாழ்க்கை உரிமையின் ஒரு அங்கமாகும். எனவே, நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமை இந்த அடிப்படை உரிமையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.’ என ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த திருமண பத்திரிகைதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அஜய் ஷர்மா, கௌஹாத்தியில் வழக்கறிஞராக 5 வருடங்கள் பணியாற்றி வருகிறார். பூஜா ஷர்மா உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். அஜய் ஷர்மா இந்த பத்திரிகைக்காக தனது உடன் வேலை பார்ப்பவர்கள் நண்பர்கள் என பலரிடம் யோசனை கேட்டு இந்த அழைப்பிதழை உருவாகியுள்ளாராம்.

Published by
மணிகண்டன்
Tags: assamIPC21

Recent Posts

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

29 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

49 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

57 minutes ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

1 hour ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

2 hours ago