Categories: இந்தியா

ஒரே இரவில் நடந்த கோர விபத்து! இன்று ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி!

Published by
பாலா கலியமூர்த்தி

ரயில் விபத்து நிகழ்ந்த ஒடிசா மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவில் நேற்று ஒரே இரவில் மூன்று ரயில்கள் இடையே ஏற்பட்ட விபத்தால்,  நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயில் விபத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். விபத்து நேர்ந்த  பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் மீட்பு பணிகள், நிவாரணம், சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தற்போது மற்றோரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரதமர் மோடி இன்று ஒடிசாவுக்கு விரைந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் மீட்பு பணிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட உள்ளார்.

இன்று ஒடிசா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, முதலில் பாலசோரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட உள்ளார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். ரயில் விபத்து மீட்பு  ஈடுபட பல்வேறு பகுதிகளில் இருந்து ராணுவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

31 minutes ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

53 minutes ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

2 hours ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

2 hours ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

3 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

3 hours ago