அடுத்த 2 ஆண்டுகளில் 6 மாநிலங்களின் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி முதல்வரும், ஆத்மி கட்சியின் (AAP) தேசிய அழைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் கபாஷேராவில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசியபோது, ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி குறித்து நாடு முழுவதும் மக்கள் பேசி வருகிறார்கள். நாட்டின் அனைத்து இடங்களிலும், மக்கள் மின்சாரம் மற்றும் நீர் மானியங்களையும், டெல்லியில் இருக்கும் நலத்திட்டங்களை விரும்புகிறார்கள். நாம் அதற்கான இடைவெளிகளைக் குறைக்க வேண்டும். ஆதலால் நாம் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும்.
அடுத்த 2 ஆண்டுகளில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களின் தேர்தலில் எங்கள் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இப்போது நாங்கள் அவர்களை அணுக வேண்டும். டெல்லியில், கொரோனா பிரச்சினையை அரசியலாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி அரசாங்கம் ஆரம்பத்திலேயே முடிவு செய்திருந்தது. கொரோனாவால் கடினமான சவாலை நாங்கள் கண்டிருக்கிறோம்.
கடந்த நவம்பர் 11 அன்று, டெல்லி ஒரு நாளில் 8,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உலகில் எந்த நகரமும் அத்தகைய சூழ்நிலைக்கு உட்பட்டதில்லை. எங்கள் கொரோனா பணிகள் இப்போது உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு எங்களிடம் ஒரு பிளாஸ்மா வங்கி தயாராக இருந்தது என்று கூறியுள்ளார். பல மாநிலங்கள் தவறான சோதனைகள் மற்றும் தவறான எண்ணிக்கையை தெரிவித்தனர்.
டெல்லியில், நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு நாளும் துல்லியமான எண்ணிக்கையை மக்களுக்கு தெரிவித்தோம் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 2020 தலைநகர் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக அக்கட்சி சார்பாக தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சுமார் 400 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வெப்ப நிலை சற்று குறைந்து சில இடங்களில் லேசான மழை…
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில், எதிர்பாராத…
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் ஏற்பட்ட…
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு…
பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின்…
பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.…