நவம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது மத்திய கல்வித்துறை அமைச்சகம்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டது. செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் கல்லூரிகள் & பல்கலைக் கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 31.10.2020 க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து,01.11.2020 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வுக்கு தயாராக அடுத்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விடுமுறை ஆகும். செமஸ்டர் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.செமஸ்டர் தேர்வுக்கு பின் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும்.இதன் பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். செமஸ்டர் தேர்வுக்கு தயாராக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை விடுமுறை காலம் இருக்கும்.ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 2வது செமஸ்டர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…