நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழப்பு..!

Published by
murugan

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அதில் 2 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிரிழந்தார். இதனால் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் பெரு அதிர்ச்சியில் உள்ளனர். புனித் ராஜ்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் ராகுல்(21) என்ற ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு ரசிகர்கள் முனியப்பன், பரசுராம் ஆகியோர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்கா, மருரு கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன்(30) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், முனியப்பா நடிகர் புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகராக இருந்தார். மேலும் அவரது அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்து வந்தார்.

நேற்று நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்து முனியப்பா அதிர்ச்சியடைந்தார். அவர் தொலைக்காட்சி முன் அழுது கொண்டு இருக்கும்போது உடனே நெஞ்சுவலி என்று கூறி கீழே விழுந்தார். உடனடியாக முனியப்பா பொன்னாச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேபோல பெலகாவியில் உள்ள ஷிண்டோல்லி கிராமத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் மற்றொரு ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். புனித் ராஜ்குமார் உயிரிழந்த செய்தியை அறிந்து தொலைக்காட்சியின் முன் கட்டுக்கடங்காமல் அழுது கொண்டிருந்தார்.

அப்போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். மேலும், நடிகர் புனித் ராஜ்குமாரின் மற்றொரு ரசிகர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டர். நேற்று இரவு நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு தனது வீட்டில் மரியாதை செலுத்திய பின்னர் ராகுல்(21) என்ற ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

16 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

16 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

17 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

18 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

18 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

19 hours ago