பெங்களூரு போதைப்பொருள் வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அவரது நெருங்கிய உறவினர் ஆதித்யா அல்வா சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கில் விவேக்கின் வீட்டையும் போலீசார் சோதனை செய்தனர்.
இன்று மதியம் 1 மணியளவில் பெங்களூரு போலீசார் சோதனை தொடங்கினர். ஆதித்யா அல்வா தலைமறைவாக உள்ள நிலையில் விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்யா இருக்கிறார் என்ற தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாரண்ட் பெற்ற பிறகுதான் ஆய்வு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
கன்னட திரையுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் பாடகர்களுக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட வழக்கில் ஆதித்யா ஈடுபட்டுள்ளார். ஆதித்யா அல்வா முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கால்ரானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…