இந்தியா

காங்கிரஸில் இணைந்த நடிகை விஜய சாந்திக்கு புதிய பொறுப்பு அறிவிப்பு…!

Published by
murugan

பாஜக மீது கடும் அதிருப்தி:

முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி முன்பு பாஜகவில் இருந்தார். பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை எனவும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் விஜயசாந்தி கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கி வந்ததால் பாஜகவில் இருந்து விலகி விரைவில் காங்கிரஸில் சேரப் போவதாக சமீபத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி தெரிவித்தார்.

பாஜகவில் இருந்து விலகல்:

இதற்கிடையில் நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.  இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்த நடிகை விஜய சாந்தி, தெலங்கானா மாநில பரப்புரைக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விஜயசாந்தி அரசியல் பயணம்:

விஜயசாந்தி சினிமாவில் நடித்துக் கொண்டே பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். 1996-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு, லோக்சபா தேர்தலில் பாஜக-வின் நட்சத்திர பேச்சளார் ஆனார். 1998-ல் பாஜகவில் இணைந்து நேரடி அரசியலில் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2009 ஆம் ஆண்டு அம்மா தெலுங்கானா கட்சி என தனிக்கட்சி தொடங்கினர். பின்னரே அப்போதைய டிஆர்எஸ் (இப்போதைய பிஆர்எஸ்) கட்சியில் இணைந்தார்.

அதன் பிறகு 2009-ல் மேடக் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு கேசிஆர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக விஜயசாந்தி காங்கிரஸில் சேர்ந்தார். இதனைத்தொடர்ந்து, விஜயசாந்தி கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

Published by
murugan

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

2 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

3 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

3 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

4 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

4 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

5 hours ago