congress [File Image]
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தங்களது அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் பணிக்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து இன்று காலை 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி.- சி57 ராக்கெட் மூலம் “ஆதித்யா எல்-1” என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் புவியின் தாழ்வு வட்டப்பாதையை சென்றடைவதற்கு 72 நிமிடங்கள் (1 மணி நேரம் 12 நிமிடங்கள்) ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூரியனை நோக்கிய பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தொடங்கியதாக, இஸ்ரோ குழுவினருக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில், ” இஸ்ரோ நாடு பெருமை கொள்ளும் வகையில் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சந்திரயான்-3க்குப் பிறகு, ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவுவதன் மூலம் இஸ்ரோ மீண்டும் நாட்டின் மதிப்பை உயர்த்தியுள்ளது. நாட்டின் விஞ்ஞானிகளின் இந்த வரலாறு காணாத சாதனையால் ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பமும் பெருமிதம் கொள்கிறது. முழு இஸ்ரோ குழுவிற்கும் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 18, 2025) பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம்…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
சென்னை: மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,…
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…