ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். பின்னர், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது.
ஆப்கானிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிவிட்டனர். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்கள் தலிபான்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் உளவுதுறையினர் மற்றும் தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கொண்டு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சியில் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதனால், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர். தலிபான் அமைப்புகளை சேர்ந்த சிலர் அடுத்தகட்டமாக சுதத்திரமடைய செய்யவேண்டும் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…