திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!!

Published by
பாலா கலியமூர்த்தி

திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விண்ட்ஷீல்ட் வெடித்ததால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திடீரென அதன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 7.52 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட விமானம், கண்ணாடியில் விரிசல் இருப்பதை விமானிகள் கவனித்த பின்னர், ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு திரும்பியது.

காலை 8.50 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அது சரக்குகளை மட்டுமே எடுத்துச் சென்றதாகவும் அதில் பயணிகள் யாரும் இல்லை என்றும் அதிகாரி தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளின் கூறுகையில், இந்த விமானம் சவுதி அரேபியாவின் தம்மம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்பும் இந்திய குடிமக்களை அழைத்து வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

விண்ட்ஷீல்ட் விரிசல் காரணமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில், விமானிகள் உட்பட அனைத்து குழு உறுப்பினர்களும் பாதுகாப்பாக இருப்பதாக திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் சிவி ரவீந்திரன் தெரிவித்தார்.

மேலும், விமானத்திற்கு முந்தைய சோதனையில் விரிசல் கண்டறியப்பட்டிருந்தால், விமானம் புறப்பட்டிருக்காது என்றும் புறப்படும் போது அல்லது பயணத்தின் போது இது நடந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…

29 minutes ago

டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

1 hour ago

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

10 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

10 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

11 hours ago