மே 17-க்கு பிறகு விமான போக்குவரத்து படிப்படியாக தொடங்கும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைராசின் தீவிர கட்டுப்படுத்த, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் வரும் மே -17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மே-17ம் தேதிக்கு பின் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய விமானநிலையங்களில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மே 17-ம் தேதித்துக்கு பிறகு உரிய கட்டுப்பாடுகளுடன் 25% விமானங்கள் இயக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் அவர்களது மொபைல் போனில் ஆரோக்ய சேது ஆப்பை வைத்திருக்க வேண்டும் என்றும், இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களில் உணவுப் பொருள்களுக்கு அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலிருந்து விமான சேவையைத் தொடங்க பணிகள் தயார் நிலையில் இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…