Pakistan Foreign Ministry [Image Source : AP/PTI]
முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியா வருகை.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கராச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கோவாவின் டபோலிமில் உள்ள விமான தளத்தில் வந்து இறங்கினார்.
லாகூர், ரஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஷங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டம் இன்றும், நாளையும் கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அதன்பின்னர், பாகிஸ்தானில் இருந்து அரசு சார்பாக யாரும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த சமயத்தில், 12 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாரி இந்தியா வருகை தந்துள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…