இன்று கரையை கடக்கும் அம்பன் புயல்.! ஐந்து சூறாவளிக்குச் சமமானது.!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கவுள்ள அம்பன் புயல் 5 சூறாவளிக்கு சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான அம்பன் புயல், அதிதீவிர புயலாக மாறி, 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்கிறது. மேலும், இது அதே திசையில் நகர்ந்து, இன்று பிற்பகல் வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்றும் என்றும் இந்த அம்பன் புயல் 5 சூறாவளிக்கு சமமானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதற்கு முன்பாக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் புயலை எதிர்கொள்வது குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். அம்பன் புயல் மேற்குவங்க கடற்கரையில் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மிக கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயலானது 1999 ஆம் ஆண்டு ஒடிசாவை தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்தனர். அதன்பிறகு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயலாக அம்பன் உள்ளது. 

இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மக்கள் இன்று காலை 11 மணி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முகாமில் இருப்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

50 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

1 hour ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago