Categories: இந்தியா

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் வாக்குவாதம்.! ஆம் ஆத்மி எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை பார்க்க சென்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். மேலும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி தடுத்து நிறுத்தப்பட்டார். 

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சரண் சிங் மீது அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருந்தும் சரண் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தை வீராங்கனைகள் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரெனெ காவல்துறையினருக்கும், மல்யுத்த வீராங்கனைகளுக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது.

போராட்ட இடத்தில மழை பெய்த காரணத்தால் போராட்டகாரர்கள் வைத்திருந்த பெட்ஷீட் நனைந்துவிட்டது. இதனால், அங்கு, வேறு பெட்ஷீட் எடுக்க செல்கையில் காவல்துறையினர் தடுத்ததாக போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த ஆம்ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்தி கைது மடிப்பு கொண்ட படுக்கையை கொண்டு வந்தார். அந்த சமயம் அவரும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆம்ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் உட்பட மேலும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், காங்கிரசை சேர்ந்த ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா மற்றும் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடும் வீராங்கனைகளை சந்திக்க சென்ற போது அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

7 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

8 hours ago