மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,121 ஆக உள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று முதல் கடைகள் கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் , கடைகளில் கூட்டத்தை குறைக்க கூடுதலாக 2 மணி நேரம் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்து வைத்திருக்கலாம். மும்பை , புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ், நாசிக், துலே, ஜல்காவ், அகோலா, அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்பட வேண்டும்.
மாநிலத்தின் மற்ற பகுதிகளில் கடைகள் 7 நாட்களும் திறந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…