Delhi CM Arvind Kejriwal [File Image]
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அந்த புகாரின் பெயரில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டஅரவிந்த் கெஜ்ரிவிலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி ஜாமின் வழங்கியது. அதன் பின்னர் அமலாக்கத்துறை உடனைடியாக உயர்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் மீது இடைக்கால தடை வாங்கியது. பின்னர், நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் தடை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து , இன்று அதே மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ , அமலாக்கத்துறையை கைது செய்துள்ளது. மேலும், டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலிடம் 5 நாள் விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.’
இந்த நடவடிக்கைகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், எனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வரக்கூடாது என ஒரு அமைப்பே வேலை செய்து வருகிறது. இப்படியான செயல் தான் சர்வாதிகாரம் அல்லது அவசரநிலை என கூறப்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளார்.
முன்னதாக கெஜ்ரிவால் கைது குறித்து ஆம் ஆத்மி கட்சி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று தெரிந்து தான் பாஜக பீதியடைந்து சிபிஐயால் அவரை கைது செய்ய வைத்துள்ளது என குற்றம் சாட்டினர்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…