ஆந்திராவில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் உள்ள ரெல்லி சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணியம். அவர் தனது வீட்டின் அருகில் கோணிப்பை ஒன்று இருப்பதை பார்த்து, அதனுள் என்ன இருக்கிறது என்று கோணிப்பையை பிரித்து பார்த்த அவர் ஷாக்காகி உள்ளார். அந்த கோணிப்பையில் மனிதனின் தலை ஒன்று இருந்துள்ளது. அதனையடுத்து கோணிப்பையை யாராவது எடுக்க வருகிறார்களா என்று தனது வீட்டிலிருந்தப்படி கண்காணித்து வந்தார் சுப்ரமணியம்.
அப்போது அவரது வீட்டின் அருகிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டிலிருந்து ராஜு என்ற இளைஞர் அந்த கோணிப்பையை எடுத்து செல்வதை பார்த்துள்ளார். சிறிது நேரங்களுக்கு பிறகு சுப்ரமணியம் கோணிப்பையை எடுத்து சென்ற ராஜுவின் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, ராஜு மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணும் சேர்ந்து அந்த மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக சுப்ரமணியம் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜு மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணை கைது செய்து கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ராஜுவின் தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, ராஜு சிறு சிறு சிறு திருட்டு வேலைகள் செய்து வருவதும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த மனிதனின் தலை மயானத்தில் இருந்து எடுத்து வரப்பட்டதா அல்லது யாரையாவது கொன்று கொண்டு வந்தார்களா..? என்கிற விதத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…