டெல்லியில் மே 10-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி நள்ளிரவு முதல் 26-ஆம் தேதி அதிகாலை 5 மணிவரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கடந்த மாதம் 25-ஆம் தேதி உத்தரவு ஒன்றை அர்விந்த் கெஜ்ரிவால் பிறப்பித்தார். அதில், ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை மறுநாள் காலை 5 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. அதன்படி மே 10-ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு நீடிக்கும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஏற்கனவே என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளதோ அது தொடரும் எனவும், என்னென்ன அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளோதோ அதுவும் தொடரும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…