பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் விவகாரம்.! குஜராத் உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு.!

Published by
மணிகண்டன்

பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் விவகாரம் குறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கல்வி தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கேள்வி எழுப்பு வருகிறார். மேலும், அவருடன் பயின்ற மற்ற தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். ஆனால் அது மூன்றாம் தரப்பினர் அடையாளத்தை வெளியிடும் உரிமை என கூறி குஜராத் பல்கலைக்கழக அதிகாரிகள் விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.

இதனை தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில், கேட்கப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் தான் வருகிறது. எனவே கேட்கப்பட்ட தகவல்களை வழங்குமாறு குஜராத் பல்கலைகழகத்திற்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில், மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜிரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவு எதிர்த்து தற்போது குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழக்கு விசாரணையானது இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

12 minutes ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

10 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

11 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

11 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

11 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

12 hours ago