பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் விவகாரம்.! குஜராத் உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு.!

Published by
மணிகண்டன்

பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் விவகாரம் குறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கல்வி தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து கேள்வி எழுப்பு வருகிறார். மேலும், அவருடன் பயின்ற மற்ற தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். ஆனால் அது மூன்றாம் தரப்பினர் அடையாளத்தை வெளியிடும் உரிமை என கூறி குஜராத் பல்கலைக்கழக அதிகாரிகள் விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.

இதனை தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில், கேட்கப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் தான் வருகிறது. எனவே கேட்கப்பட்ட தகவல்களை வழங்குமாறு குஜராத் பல்கலைகழகத்திற்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில், மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜிரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவு எதிர்த்து தற்போது குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடி உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று குஜராத் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வழக்கு விசாரணையானது இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago