எச்சரிக்கை.. சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ள ஆம்பன்- மேற்குவங்கத்தில் ரெட் அலெர்ட்!

Published by
Surya

அதிதீவிர புயலாக உருமாறிய ஆம்பன் புயல், இன்னும் சில மணிநேரத்தில் கரையை கடக்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுவிழந்து, அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் தற்பொழுது மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும், அது மேற்குவங்கத்திலிருந்து 130 கி.மீ. தொலைவிலும், கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல், வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்னும் சில மணிநேரத்தில் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கவுள்ளது.

இந்த புயலால், மணிக்கு 150-160 கி.மீ. வேகத்தில் காற்று விசவுள்ளதால், அவ்வப்போது 185 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும், 2 நாட்களுக்கு மத்திய மற்றும் வடக்கு கடல்பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த புயல் காரணமாக மேற்கு வங்காளத்தில் ரெட்-அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது 1999 ஆம் ஆண்டு ஒடிசாவை தாக்கி சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்தனர். அந்த புயல், 5 சூறாவளிக்கு சமமானது. அப்போது மிக கடுமையான சூறாவளி, 195 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. ஒரு மணி நேரத்திற்கு 220 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. அதன்பிறகு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிக மோசமான புயலாக அம்பன் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Published by
Surya

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

15 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

16 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

18 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

18 hours ago