Categories: இந்தியா

மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு! 27ம் தேதி NExT தேர்வு கருத்தரங்கம் – என்எம்சி அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு 27ம் தேதி NExT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு.

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் வரும் 27-ஆம் தேதி NExT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து மாணவர்களும் NEXT தேர்வு குறித்து இணையதள காணொளி கருத்தரங்கில் பங்கேற்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரி எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களாக பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிப்பட்டுள்ளது. நெஸ்ட் தேர்வு குறித்து அச்ச உணர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்காக கருதரங்கத்திற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது

இதனிடையே, எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்(நெக்ஸ்ட்) தேர்வு நடத்தப்பட உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வாகவும், நவீன மருத்துவம் மற்றும் முதுகலைப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான உரிமத் தேர்வாகவும் இருக்கும். மேலும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் ‘‘நெக்ஸ்ட்’’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

12 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

12 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

13 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

14 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

14 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

15 hours ago