ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ஆய்வு – மத்திய அரசு..!

Published by
murugan

புதியதாக கண்டறியப்பட்டுள்ள ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் பரவி வரும் ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா குறித்து ICMR ஆய்வை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருவரை 10 பேருக்கு ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மஹாராஷ்டிராவில் உருமாறிய கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்யபோது ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா கண்டறியப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இந்தூர் சுற்று வட்டாரங்களில் 6 பேருக்கு ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏ.ஒய் 4.2 என்பது சார்ஸ் கோவிட்2 வைரஸின் டெல்டா மறுபாட்டின் துணை பிரிவு என்றும் மிக வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ICMR  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஒய் 4.2 உருமாற்ற கொரோனா பிரிட்டனில் அதிகம் பரவுகிறது. இதனால், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இருந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும் என்றும் பொதுமக்கள் முககவசம் , தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

17 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago