பாராளுமன்றத்தில்,குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறியது. இந்நிலையில் ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசும் போது, இந்திய விடுதலைக்காக போராடிய பகத்சிங்கும் சுபாஷ் சந்திர போஸும் இந்திய நாட்டிற்காக பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சாதாரணமாக வலம் வரும் வகையில் நம் நாட்டை பொது சத்திரமாக மாற்ற வேண்டுமா? என்று தெரிவித்தார். மேலும் இவர், பாரத் மாதா கீ ஜே என சொல்ல தயாராக இருப்போர் மட்டுமே இந்தியாவில் வாழலாம் என தெரிவித்துள்ளார். போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தபாத் என்று கூறியவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் விருப்பம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என முஸ்லீம்களை பார்த்து கூறியதை மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…