steps to stay safe [Image Source : financialexpress]
பிபார்ஜாய் புயலுக்கு மத்தியில் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயல், சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, 15ம் தேதி மிக தீவிர புயலாக மாறி, 150 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிபார்ஜாய் (Biparjoy) புயலுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டிற்குள் இருப்பவர்கள் மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத்தை அணைக்க வேண்டும்.
கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். உங்கள் வீடு பாதுகாப்பற்றதாக இருந்தால், சூறாவளி தொடங்கும் முன் சீக்கிரம் வெளியேற வேண்டும். கொதிக்கவைத்த அல்லது குளோரின் கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையை மட்டும் நம்பவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வீட்டிற்கு வெளியில் இருந்தால் சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம். உடைந்த மின்கம்பங்கள் மற்றும் கம்பிகள் மற்றும் பிற கூர்மையான பொருட்களைக் கவனித்து அதிலிருந்து விலகி இருந்து, பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…