Amit Shah speech in Lok Sabha [Image Source : Twitter/@ani_digital]
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், இந்திய குற்றவியல் சட்டம் உள்ளிட்ட 3 முக்கிய சட்டங்களை புதுப்பிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயரை மாற்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது, இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர் அமித்ஷா. அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை “பாரதிய நியாய சங்ஹீத” என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை “பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத” என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (IEA) பெயரை “பாரதிய சக் ஷயா” என மாற்றவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட 3 சட்டங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். அமித்ஷா கூறுகையில், இந்தச் சட்டத்தின் கீழ், தேசத்துரோகம் போன்ற சட்டங்களை ரத்து செய்கிறோம். 1860 முதல் 2023 வரை, நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்களின்படி செயல்பட்டது. மூன்று சட்டங்கள் மாற்றப்பட்டு, நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பில் பெரிய மாற்றம் வரும் என்றார்.
இந்த மசோதாவின் கீழ், தண்டனை விகிதத்தை 90%க்கு மேல் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். அதனால்தான், 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கும் பிரிவுகள், அனைத்து வழக்குகளின் கீழும் தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்திற்குச் செல்வது கட்டாயமாக்கப்படும் என்ற முக்கிய விதியை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் பாஜக எம்பி மக்களவையில் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…