[Image source : Deccan Herald]
நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் சுடப்படுவர் என பாஜக எம்எல்ஏ கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த தேர்தல் பிரச்சார மேடையில் கர்நாடக பாஜக எம்எல்ஏ கூறிய கருத்து மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னல் பிரச்சார பேரணியில் பேசுகையில், தர்மத்திற்கு எதிராகவோ அல்லது இந்தியாவிற்கு எதிராகவோ செயல்படுபவர்கள் சுடப்படுவார்கள் என்றும், நாங்கள் அவர்களை சிறைக்கு அனுப்புவதை நிறுத்தி, சாலையிலேயே அவர்களுக்கான முடிவு எடுக்கப்படும். என்று வெளிப்படையாக கூறி பரபரப்பை உண்டு செய்தார்.
மேலும், அவர் கூறுகையி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முறையை கர்நாடகாவில் பாஜக அமல்படுத்தும் என்று பாஜக எம்எல்ஏ யத்னால் கூறியுள்ளார். உத்திர பிரதேசத்தில் அண்மையில் கேங்ஸ்டர்கள் தொடர் போலீஸ் என்கவுண்டர் மற்றும், மர்ம நபர்களால் ரவுடிகள் சுடப்பட்ட நிகழ்வுகளும் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…