பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக தேசிய தலைவர்.!

Published by
மணிகண்டன்

மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இறுதி சடங்கிற்கு நேரில் வந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அஞ்சலி செலுத்தினர். 

ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக பதவியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (வயது 95) வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் இரவு அவர் உயிரிழந்தார்.

[Image source : India Tv]
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.அவரது நல்லடக்கம் இன்று பஞ்சாபில் அவரது சொந்த ஊரான லம்பி கிராமத்தில் நடைபெறுகிறது. இன்று பிரகாஷ் சிங் பாதல் அடக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

தேசிய தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலிசெலுத்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுததினார். அதே போல பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் லம்பி கிராமத்திற்கு வந்து பிரகாஷ் சிங் பாதலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

PM Modi condolence on Parkash Singh Badal house
[Image source : Hindustan Times]
பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக, நேற்று (புதன்கிழமை) சண்டிகர் வந்து சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) அலுவலகத்திற்கு நேரில் சென்று தனது இறுதி அஞ்சலியை பிரகாஷ் சிங் பாதலுக்கு செலுத்தினார்.

மறைந்த பிரகாஷ் சிங் பாதல், 1970-1971, 1977-1980, 1997-2002 மற்றும் 2007-2017 ஆகிய காலகட்டங்களில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பாக பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் என்பதும், பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்ததில் இளம் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தான் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

11 minutes ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

2 hours ago

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

2 hours ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

4 hours ago

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…

5 hours ago

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…

6 hours ago