புதுச்சேரியில் பரபரப்பு.., பாஜகவின் பலம் 12 ஆக அதிகரிப்பு..!

Published by
murugan

இன்று  சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் பாஜகவிற்கு ஆதரவு தந்ததால் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை  தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.

ஆனால், புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்தது. 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் இதனால், முதலில் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்தது.

கடந்த 7-ஆம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று  காலை திருபுவனை சுயேச்சை வேட்பாளர் அங்காளன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு தந்தார்.

இவரை தொடர்ந்து மற்றோரு சுயேச்சை வேட்பாளர் உழவர்கரை எம்எல்ஏ சிவசங்கரனும் பாஜகவிற்கு ஆதரவு தந்ததால் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது. இதனால், தற்போது பாஜகவில் வெற்றிபெற்ற 6 எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர்.

புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். காரணம் சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10, பாஜகவுக்கு 12  எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு…

4 hours ago

பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!

பெங்களூர் :  பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின்…

4 hours ago

”பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது” – பிரதமர் மோடி இரங்கல்.!

பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.…

4 hours ago

”பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல்…

5 hours ago

ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்.., மெட்ரோ நிலையங்கள் மூடல்.!

பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால்,…

5 hours ago

ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம்.., பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…

6 hours ago