death [file image]
பெங்களூர் : உள்ள கெம்பாபுரா ஹெப்பலில் உள்ள சிந்தி கல்லூரியில் புதன்கிழமை 22 வயது இறுதியாண்டு பி.ஏ மாணவர் பார்கவ் என்பவர் பாதுகாவலரைக் கத்தியால் குத்திக் கொன்றார் . இந்த சம்பவத்தில் பலியான ஜெய் கிஷோர் ராய் , 52, ஹுனசமரனஹள்ளியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார விழாவில் பார்கவ் தனது நண்பர்கள் சிலருடன் கலந்துகொண்டார் . பிற்பகல் 3 மணியளவில், பார்கவ் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற முயன்றபோது, பணியில் இருந்த ராய் தடுத்துள்ளார். இருப்பினும், பார்கவ் கட்டாயப்படுத்தி வெளியேறினார். பின் பாதுகாவலர் வெளியேறினால் திரும்பி உள்ளே அனுமதி கிடையாது என்பது போல கூறியுள்ளார்.
இதனால் ஏற்கனவே, இருவருக்கு வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. போதையில் இருந்த பார்கவ் கல்லூரியை விட்டு வெளியேற்றிவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்துள்ளார். அப்போது பாதுகாவலர் ஜெய் கிஷோர் ராய் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்கவ் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் ரொம்பவே பெரிதாக வெடித்தநிலையில் , மறைத்து வைத்திருந்த கத்தியை பார்கவ் எடுத்து பாதுகாவலரை கொடூரமாக குத்தி கொலை செய்தார். இது தொடர்பான அதிர்ச்சியான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அஸ்ஸாமைச் சேர்ந்த பார்கவ், அவரது வகுப்பில் முதலிடம் பெற்றவர்களில் ஒருவர். ராயின் சக ஊழியர் ராஜசேகர் என்ற பாதுகாப்பு ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 101 இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…
அகமதாபாத் : விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 12 அன்று,…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…
டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக உதகை, குந்தா, கூடலூர், மற்றும்…