நாளை முதல் பூஸ்டர் டோஸ்.. அதிகபட்சம் கட்டணம் ரூ.150 – மத்திய அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

இரண்டு தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், 2 தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்கள், அதிகபட்சம் ரூ.150 வரை மட்டுமே சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தகுதியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் கூறியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago