இரண்டு தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையில், 2 தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்கள், அதிகபட்சம் ரூ.150 வரை மட்டுமே சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தகுதியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் கூறியுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…