தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸின் விலையை ரூ.600லிருந்து, ரூ.225 ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது. நாளை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படவுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…