#BREAKING: 4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகள் – மத்திய அரசு அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது 4ஆம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்கத் தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. அதில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, 9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம். ஆனால் கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டு விமான சேவை தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

5 minutes ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

40 minutes ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

2 hours ago

அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் – தவெக தலைவர் விஜய் மரியாதை!

சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…

2 hours ago

”எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!

மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…

4 hours ago

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…

4 hours ago