Chandrayaan3Mission [Image source : Twitter/ @isro]
சந்திரயான் 2 ஆர்பிட்டர், சந்திராயன் 3 லேண்டர் இடையே வெற்றிகரமாக தகவல் தொடர்பு ஏறப்படுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், ஏற்கனவே நிலவை சுற்றி வரும் சந்திரயான் – 2 ஆர்பிட்டரோடு வெற்றிகரமாக தகவல் தொடர்பு ஏற்பட்டது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுவும், ‘Welcome, buddy!’ என சந்திராயன் 3 விக்ரம் லேண்டரை சந்திரயான் 2 ஆர்பிட்டர் வரவேற்றுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் – 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சந்திரயான் – 2 திட்டத்தில் லேண்டரை தரையிறக்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும், அதன் ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. இந்த நிலையில், நிலவை நெருங்கும் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர், சந்திரயான் – 2 ஆர்பிட்டரோடு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் நிலையில், வெற்றிகரமாக சந்திரயான் – 2 ஆர்பிட்டருடன், சந்திராயன் 3 லேண்டர் தொடர்பை ஏற்படுத்தியது.
பெங்களுருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. சந்திரயான் – 2 திட்டம் தோல்விடைந்த நிலையிலும், அதன் ஆர்பிட்டர் சந்திரயான் – 3க்கு உதவி செய்கிறது. தனக்கு கிடைக்கும் தகவல்களை லேண்டர் ஆர்பிட்டருக்கு தொலைத்தொடர்பு மூலம் அனுப்பவும் பெறவும் முடியும். மேலும், திட்டமிட்டபடி சந்திரயான் – 3 லேண்டரை நிலவை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு புதன்கிழமை மாலை 5.20 மணியில் இருந்து நேரலையாக ஒளிபரப்பட உள்ளது. பெங்களுருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரை இறக்குவதற்கான நடவடிக்கை நடைபெறும். சந்திரயான் – 2 ஆர்பிட்டர் மூலமாக ரோவரிடம் இருந்து பெரும் தகவல்களை, லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பும். நாளை மறுநாள் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட உள்ளது.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…