ரூ.400 மதிப்புள்ள திண்பண்டங்களுக்காக, ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த தொழிலதிபர்.!

Published by
லீனா

ஆன்லைனில் 400 ரூபாய் மதிப்புள்ள உணவுப்பொருள் ஆர்டர் செய்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்த தொழிலதிபர்.

நாகரீகம் வளர்ந்த காலகட்டத்தில், நமது வீடுகளில் உணவு சமைத்து உண்பதை விட, அதிகமாக தங்களது நாவுக்கு ருசியான உணவுகளை, ஆன்லைனில் ஆர்டர் செய்து தான் வாங்கி சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளை தான், இன்றைய தலைமுறையினரும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இன்று படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரிடமும் இந்த பழக்கம் வழக்கத்தில் உள்ள நிலையில், இணையத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுவதன் மூலம், மக்களில் பலர் ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

அந்த வகையில், 40 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர், ரூ.400 மதிப்புள்ள பூஜியா பாக்கெட்டுகளை (திண்பண்டங்கள்) ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்த உணவுப்பொருள் அவருக்கு கிடைக்காத காரணத்தால், இதுகுறித்து புகார் செய்வதற்கு ஹெல்ப்லைன் சேவை எண்ணை தேடியுள்ளார். ஆனால், இவருக்கு கிடைத்தது சைபர் மோசடி செய்பவர்கள் பதிவேற்றிய போலியான தொலைபேசி எண். இந்த எண்ணை அந்த தொழிலதிபர் தொடர்புகொண்ட  போது, அவரிடம் இருந்து வங்கி விவரங்களான யுபிஐ எண் மற்றும் ஒடிபி ஆகியவற்றை கேட்டு விசாரித்துள்ளனர். இதன் பின் விளைவை அறியாத தொழிலதிபரும், தனது வங்கி கணக்கு விபரங்களை கூறியுள்ளார். 

இந்த தொழிலதிபர் தனது வங்கி விபரங்களை கொடுத்த சில மணி நேரங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர், மும்பை சேர்ந்த போரிவாலி என்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Published by
லீனா

Recent Posts

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

49 minutes ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

1 hour ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

2 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

3 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

3 hours ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

4 hours ago