SugarcaneFormers [Image Source : The Hindu]
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு 315 ரூபாய்க்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது இதுவரை இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பிரதமர் மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பார். அமைச்சரவை அளித்த இந்த ஒப்புதலால் 5 கோடி கரும்பு விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்கள், சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களுக்கும் பயனடைவார்கள்.
மேலும், 2013-14ல், குவிண்டால் ரூ.210 ஆகவும், மொத்த கொள்முதல் விலை ரூ.97,104 கோடியாகவும் இருந்தது. இது பாஜக ஆட்சியில் ரூ.1,13,000 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், 2014-23ம் ஆண்டில் மொத்த கொள்முதல் ரூ.7,86,066 கோடியாக உள்ளது என்றும் அனுராக் தாக்கூர் கூறினார்.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…