Categories: இந்தியா

“NDA கூட்டணியால் ‘I.N.D.I.A’ கூட்டணியை வீழ்த்த முடியுமா..? – மம்தா பானர்ஜி

Published by
பாலா கலியமூர்த்தி

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவை எதிர்க்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தைரியம் உள்ளதா? மம்தா பானர்ஜி பேட்டி.

பெங்களுருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினர். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதற்காக கருத்து வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் இணைந்துள்ளோம்.

எங்களது இந்த முயற்சி வெற்றி பெறும், அதற்கான முதற்படி பெங்களூருவில் இன்று தொடங்கியுள்ளது என கூறி, எங்கள் இந்தியா கூட்டணியை வீழ்த்த முடியுமா என பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு சவால் விடுத்தார் மம்தா. மேலும், பேசுகையில், இன்று மத்திய அரசு செய்யும் ஒரே வேலை அரசுகளை விலைக்கு வாங்குவது மட்டுமே. நாங்கள் எங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம், நாங்கள் தேசபக்தர்கள்.

ஏழைகள், விவசாயிகளுக்காக தோள் கொடுத்து நாட்டை அழிவு பாதையில் இருந்து காக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றி, ஒட்டுமொத்த  தேசத்தின் வெற்றி.  எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவை எதிர்க்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தைரியம் உள்ளதா? என சவால் விடுத்த மம்தா, எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அமைந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம், கூட்டம் என அனைத்து இந்தியா என்ற பெயரிலேயே நடைபெறும் என்றும் இந்தியாவை பேரழிவில் இருந்து காப்பாற்றுவோம் எனவும் உறுதி அளித்தார். எதிர்க்கட்சி கூட்டணியாக இந்தியா வெற்றி பெறும், இந்திய நாடு வெற்றி பெறும், பாஜக தோல்வி அடையும் என்றார். பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago